அண்மைய பதிவுகள்

எனக்கு பிடித்த திரைக்காட்சிகள்

எனக்கு பிடித்த திரைக்காட்சிகள்.

1. பருத்தி வீரன்.

அவனையே நினைத்து வாழும் அவள், அவனுக்கும், அவனுடைய சித்தப்பாவிற்கும்,
அவர்களுடைய வாழ்க்கைய புரிய வைக்கும் அந்த காட்சி.
பிரியா மணி, சரவணன், கார்த்தி மூவரின் நடிப்பும் அற்புதமாய் வெளிப்பட்டிருக்கும் காட்சி.
"என்னடா சொல்ற" என்னும் வார்த்தையை கேட்பதற்கு முன், கண்ணீரை தேக்கி வைத்து உதடுகள் துடிக்க பேசியிருக்கும் காட்சி. பிரியா மணியின் மிகச்சிறந்த நடிப்பு.






2. அண்ணாமலை.

மகள், தன எதிரியின் மகனிடம் காதல் வயப்பட்டு, அவனுடன் சுற்றுவதை பார்த்த
பின்பு மிகவும் நிதானமாய் அவளுக்கு புத்தி சொல்லும் காட்சி.
எவ்வளவோ சொன்ன பின்பும், தான் சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கும் மகளை,
வேறு வழியின்றி கை நீட்டி அடிக்கும் தந்தை.
வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து நிம்மதியாய் இருக்கும் நாயகன், போட்டி, சவால், பணம், பாசம் என்று சிக்கி உழன்று பழைய வாழ்க்கயை நிநைதூ பார்க்கும் காட்சி.
ரஜினியின் நடிப்பு - Super.





3. சுப்ரமணியபுரம்

காதலிக்காகவே வாழும் காதலன் அந்த காதலியாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு
உயிர் விடும் நாயகன். காதலி தன்னை ஏமாற்றியது தெரிந்ததுமே மனதளவில்
உயிர் விடும் நாயகன், தன்னை எந்தவொரு ஆயுதத்தால் தாக்கினாலும்,
வலியேதும் உணராமல் காதலி செல்லும் பாதையையே பார்த்துக்கொண்டே சாகும் காட்சி.
சாதாரண ரசிகனையும் நிமிர்ந்து உட்கார வைக்கும் காட்சி.
ஜெய், சுருதி, சமுத்திரக்கனி அனைவரின் நடிப்பும் அழகு.
ஜெய்-யின் நடிப்பு சிகரம்.






0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin