அண்மைய பதிவுகள்

கோடானு கோடி நன்றிகள்..



காதலிக்கு கடிதம் எழுத, இரவெல்லாம் யோசித்து யோசித்து....,
எத்தனையோ பேப்பர்களை கிழித்து,
நடுநிசியில் ஒரு வழியாய் எழுதி முடித்து, காலையில் எழுந்து பார்க்கும் போது,
அதுவுமே கேவலமாய் இருக்கும்.
அன்றைக்கும் கொடுக்காமல்,
அன்றிரவும் யோசித்து, புதியதாய் சிந்தித்து,
கிழித்தெறிந்த பக்கங்கள் பல.

இது எனக்கு மட்டுமல்ல.
காதலித்த, காதலிக்கும், காதலிக்கப்போகும்
பலருக்கும் ஒரு வாழ்க்கை சம்பவம்தான்.


அது போல..,
புதியதாய் தொடங்கிய எனது வலைப்பதிவில்,
என்ன எழுத என்று தெரியாமல்,
என்னென்னவோ எழுதி, டெலீட் செய்து..,
இறுதியாய், வலையுலகில் பலரின் பதிவுகளுக்கு சென்று..,
கொஞ்சம் கொஞ்சமாய் கற்றுக்கொண்டு,

இப்போது ஏதோ, உங்களால் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளேன்.

வலையுலக வாசகர்களிடம்,
இப்போது என் பதிவுக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.


எனக்கு வாக்களித்து ஏற்றுக்கொண்ட வாசகர்களுக்கும்,
எனக்கு குருவாய் இருந்த பதிவர்களுக்கும்,
கோடானு கோடி நன்றிகள்.













2 comments:

யூர்கன் க்ருகியர் said...
This comment has been removed by the author.
யூர்கன் க்ருகியர் said...

of course.. u r riting gud posts :)
kep g'ing dear!

Post a Comment

Blog Widget by LinkWithin